போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது திடீரென மேடை ஏறிய இளம்பெண் ஒருவர்
சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் வாழ்க பாகிஸ்தான் வாழ்க என்று இளம்பெண் மேடையில் கத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி தலைமையில் சிஏஏ.,வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது திடீரென மேடை ஏறிய இளம்பெண் ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என மைக்கை பிடித்து முழக்கமிட துவங்கினார். 
அப்போது மேடையில் இருந்த ஓவைசி உள்ளிட்ட சிலர் விரைந்து வந்து அந்த பெண்ணை தடுத்தனர். அவரிடம் இருந்து மைக்கை வாங்க முயற்சித்தும், அப்பெண் பிடிவாதமாக பாகிஸ்தான் ஜிந்தாபாத் என தொடர்ந்து முழுங்கிவந்தார். இதனையடுத்து அப்பெண் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரிக்கப்பட்டு, அவர் மீது பிரிவு 124ஏ கீழ் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த பெண் எங்கள் அமைப்பை சேர்ந்தவர் இல்லை என்று ஓவைசி மறுத்துவிட்டார். இருப்பினும் அமைப்பில் இல்லாத பெண்ணை மேடையில் ஏறி பேச ஏன் அனுமதிக்க வேண்டும், சிஏஏ எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக கூட்டங்கள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.